Sunday 5th of May 2024 12:15:56 PM GMT

LANGUAGE - TAMIL
-
இந்தோனேசிய நிலநடுக்கத்தில் சிக்கி  பலியானோர் எண்ணிக்கை 81-ஆக உயர்வு!

இந்தோனேசிய நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 81-ஆக உயர்வு!


இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானவா்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை 8 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்த நிலையில் படுகாயமடைந்த 253 பேர் மீட்கப்பட்டு தற்போது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 28ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE